மிலிந்த, கப்ராலுக்கு அமைச்சரவை அந்தஸ்தா?

மிலிந்த, கப்ராலுக்கு அமைச்சரவை அந்தஸ்தா?

அமைச்சரவை அந்தஸ்தைக்கொண்ட எந்தவொரு நியமனங்களும் இதுவரையில் வழங்கப்படவில்லை என அமைச்சரவை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை அந்தஸ்துள்ளவர்களை நியமிப்பதற்கு அரசியலமைப்பில் குறிப்பிட்ட விதிமுறைகள் இல்லை எனவும் அமைச்சரவை அலுவலகம் தெரிவித்துள்ளது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ‘சண்டேடைம்ஸ்’ பத்திரிகையின் கோரிக்கைக்குப் பதிலளித்துள்ள அமைச்சரவையின் தகவல் அதிகாரி டபிள்யூ.கே.வீரவர்தன, அமைச்சரவை அலுவலகத்தில் உள்ள தகவல்களுக்கு அமைய, எந்தவொரு அரசாங்க அதிகாரிகள், இராஜதந்திரிகளுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள நியமினங்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிப்பதற்கான சகல அதிகாரமும் ஜனாதிபதிக்கே உள்ளதாக அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவ மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.