மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை

மியன்மாரிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை

மியன்மாரிலிருந்து 20,000 மெற்றிக்தொன் அரிசியினை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான அனுமதியினை நேற்று (29) திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீhமானிக்கப்பட்டுள்ளது.

பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான கொள்ளளவைப் பேணுவதற்கும் இயலுமான வகையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

100,000 மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு எனும் அடிப்படையின் கீழ் இலங்கை அரசாங்கம் மற்றும் மியன்மார் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் 20,000 மெற்றிக்தொன் அரிசியை, ஒரு மெற்றிக்தொன் 460 அமெரிக்கன் டொலர்களுக்கு வரையறுக்கப்பட்ட இலங்கை வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் என்ற அடிப்படையில் அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.