துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குக்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் போது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரின் சிபாரிசுகள் கோரப்பட வேண்டும் என இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எந்த அடிப்படையில் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என்ற விடயம் பொதுமக்கள் தெரிய வேண்டும் என குறித்த கடிதத்தில் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளது.