கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்; கல்முனை காணி பதிவகம் மூடல்

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்; கல்முனை காணி பதிவகம் மூடல்

பாறுக் ஷிஹான்

8 கொரோனா தொற்றாளர்கள் கல்முனை மாவட்ட காணிப் பதிவகத்தில் இனங்காணப்பட்டதை அடுத்து எதிர்வரும் ஜனவரி 22 திகதி வரை மூடப்பட்டுள்ளது.

கல்முனை உள்ள மேற்படி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டீஜன் பரிசோதனையில் இவ்வாறு 8 பேர் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய பொதுச்சுகாதார அதிகாரி உறுதிப்படுத்தினார்.

சுமார் 31 உத்தியோகத்தர்களிடம்  இன்று(13) மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் போது இவ்வாறு 8 பேர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா அனர்த்தம் இலங்கையில் பரவல் அடைந்த பிற்பாடு இக்காணி பதிவகத்தில் 3 ஆவது தடவையாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.