அரசாங்க அலுவலகங்களிற்காக ஜனாதிபதி செயலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டி

அரசாங்க அலுவலகங்களிற்காக ஜனாதிபதி செயலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டி

கொரோனா வைரஸ் பரவலினை அடுத்து அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் வழமையான நாளாந்த சேவைகளை ஆரம்பிப்பதற்காக மாவட்டங்களை திறக்கும் போது அரசாங்க அலுவலகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டியொன்றை ஜனாதிபதி செயலகம் இன்று (18) சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்ட இந்த வழிகாட்டி அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.