'நடை பாதைகளில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை'

நடை பாதைகளில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராக நாளை (17) வெள்ளிக்கிழமை முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் இன்று அறிவித்தனர்.

அது போன்று வாகனங்களை நிறுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.