கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வியாங்கொடைக்கு புதிய ரயில் பாதை

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வியாங்கொடைக்கு புதிய ரயில் பாதை

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வியாங்கொடை வரை புதிய புகையிரதப் பாதையை அமைக்க எதிர்பார்த்துள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

மினுவாங்கொடை பிரதேச செயலகத்தில் நேற்று (02) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள் கொழும்பிற்கு பயணிக்காமல், புகையிரதத்தில் வியாங்கொடை ஊடாக கண்டி, பதுளை, யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட இடங்களுக்கு பயணிக்க முடியும் எனவும் அமைச்சர் கூறினார்.