ரம்புக்கனை சம்பவம்: தென் கிழக்கு பல்கலை மாணவர் உயிரிழந்தாரா?

ரம்புக்கனை சம்பவம்: தென் கிழக்கு பல்கலை மாணவர் உயிரிழந்தாரா?

ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று (19) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அசம்பாவிதத்தின் போது தென் கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் பதிவுகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன.

எனினும், இந்தப் பதிவினை அப்பலைக்கழக மாணவர் ஒன்றியம் நிராகரித்ததுடன் ரம்புக்கனை அசம்பாவிதத்தின் போது தென் கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவரொருவர்  உயிரிழக்கவில்லை எனவும் தெரிவித்தது.

இதேவைளை குறித்த சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையானவர் ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் பிரிவின் முன்னாள் உறுப்பினர் என அக்கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. இந்த அறிக்கையில் அவர் பல்கலைகழக மாணவர் என்று குறிப்பிடப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

இவ்வாறான நிலையில் குறித்த சம்பவத்தின் போது தென் கிழக்கு பல்கலை மாணவரொருவர் உயிரிழந்தார் என சமூக ஊடகங்களில் பிழையாக வழிநடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.