கொவிட்-19 இற்கான தடுப்பூசியை விரைவில் கொண்டு வர நடவடிக்கை: ஜனாதிபதி

கொவிட் - 19இற்காக வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியொன்றை விரைவில் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கிராம மக்களுடன் கலந்துரையாடல் திட்டத்தின் ஐந்தாம் கட்டம் அம்பாறை உகன பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் இணைந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

தடுப்பூசியை விரைவாகப் பெறுவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம், இந்தியா, சீனா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இது தொடர்பில் இந்திய பிரதமருக்கும், சீனா ஜனாதிபதிக்கும்  தனிப்பட்ட ரீதியில் கடிதம் எழுதியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

மேலும், ஒரு தொகை தடுப்பூசியை இலவசமாகப் பெறவும் ஒரு தொகை தடுப்பூசியை பணம் கொடுத்து கொள்வனவு செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.