'கொடேகொடவின் இராஜினாமா எனும் செய்தி பொய்'

'கொடேகொடவின் இராஜினாமா எனும் செய்தி பொய்'

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஜயந்த கொடேகொட இராஜினாமாச் செய்யவுள்ளதாக வெளியான செய்திகளில் எந்தவித உண்மையுமில்லை என அக்கட்சி அறிவித்தது.

"இது தொடர்பில் எமது கட்சி இதுவரை எந்தவித தீர்மானமொன்றினையும் முன்னெடுக்கவில்லை" என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்காக ஜயந்த கொடேகொட தனது தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவினையினை இராஜினாமாச் செய்யவுள்ளதாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக தற்போது பரவி வருகின்றது.

இது தொடர்பில் வினவியதற்கே பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

"இதுவொரு பொய்யான செய்தியாகும். இப்படியொன்று நடைபெறுமென்றால், ஊடகவியலாளர் மாநாட்டின் ஊடாக பகிரங்கமாக அறிவிப்போம்" என அவர் மேலும் கூறினார்.