ஓமானுக்கான இலங்கை தூதுவராக சபருல்லாஹ் கான் நியமனம்

ஓமானுக்கான இலங்கை தூதுவராக சபருல்லாஹ் கான் நியமனம்

ஓமான் நாட்டுக்கான இலங்கையின் புதிய தூதுவராக ஏ.எல். சபருல்லாஹ் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நியமனத்திற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நேற்று (05) வியாழக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் இந்த அனுமதி வழங்கப்பட்டது.

இலங்கை வெளிநாட்டு சேவையில் சிரேஷ்ட அதிகாரியான இவர், பல நாடுகளில் பணியாற்றியுள்ளார். தற்போது இவர், வெளிநாட்டு அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றி வருகின்றார்.

ஓமான் நாட்டுக்கான தூதுவராக தற்போது கடமையாற்றும் அமீர் அஜ்வத், தனது கடமைகளை நிறைவு செய்துவிட்டு விரைவில் நாடு திரும்பவுள்ளார். இதனால் ஏற்படும் வெற்றிடத்திற்கே  சபருல்லாஹ் கான் நியமிக்கப்படுகின்றார்.