'சில அரசியல்வாதிகள் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக வதந்திகள் பரவல்'

'சில அரசியல்வாதிகள் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக வதந்திகள் பரவல்'

குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும், அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுவதனை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அவதானித்துள்ளது.

இவை போலியானதும் அப்பட்டமான பொய்யானதுமான அறிக்கைகளாக உள்ளதுடன் எந்தவிதமான உண்மைகளோ அல்லது அர்த்தங்களோ இல்லாதவை. இவ்வாறான செய்திகளை கடுமையாக மறுப்பதாகவும் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்தது.