முஸ்லிம் சேவையில் ஏற்பட்ட தடங்களுக்கு மன்னிப்புக் கோரினார் SLBC தவிசாளர்

முஸ்லிம் சேவையில் ஏற்பட்ட தடங்களுக்கு மன்னிப்புக் கோரினார் SLBC தவிசாளர்

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை நேற்று (16) திங்கட்கிழமையும் இன்று (17) செவ்வாய்க்கிழமை காலையும் ஏற்பட்ட தடங்களுக்கு மன்னிப்புக் கோருவதாக அதன் தலைவர் ஹட்சன் சமரசிங்க தெரிவித்தார்.

முஸ்லிம் சேவை இன்றிரவு 8.00 மணிக்கு வழமை போன்று 102.1 அலைவரிசையில் ஒலிபரப்பாகியது. இதன்போது SLBC தலைவர் ஹட்சன் சமரசிங்க விசேட உரையொன்றினை சிங்கள மொழியில் நிகழ்த்தினார்.

இதிலேயே குறித்த பகிரங்க மன்னிப்பினை அவர் வெளியிட்டார். இந்த உரையின் போது, முஸ்லிம்கள் பண்டைய மன்னர்களுடன் நெருங்கிச் செயற்பட்ட விடயத்தினையும் அவர் ஞாபகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.