காலையில் எரிவாயுவிற்காக போராடியவர் மாலையில் மரணம்

காலையில் எரிவாயுவிற்காக போராடியவர் மாலையில் மரணம்

சமையல் எரிவாயுவொன்றினை  வழங்குமாறு கோரி இன்று (01) புதன்கிழமை மூதூர் பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரொருவர், மாலையில் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

போராட்டத்தின் போது ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக இவர் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இவர் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ செய்தி இன்று சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நயீம் புஹாரி