சம்பள நிலுவை பணத்தினை அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்கு அன்பளிப்பு செய்த டாக்டர் சாபி

சம்பள நிலுவை பணத்தினை அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்கு அன்பளிப்பு செய்த டாக்டர் சாபி

போலிக் குற்றஞ்சாட்டப்பட்ட வைத்தியர் சாபி சிஹாப்தீன் அரசாங்கத்தினால் வழங்கப்படவிருந்த சம்பள நிலுவைத் தொகையின் அத்தியவசிய மருந்துப் பொருட் கொள்வனவிற்காக அன்பளிப்புச் செய்திருந்தார்.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் வைத்தியர் சாபிக்கு வழங்கப்பட்ட வேண்டிய நிலுவைத் தொகையான 26 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட தொகையினை கடந்த 9ஆம் திகதி காசோலையின் மூலம் சுகாதார அமைச்சு வழங்கியிருந்தது.

இதன் மூலம் கிடைக்கப் பெற்ற பணத்தினை இலங்கைக்கு தேவையான அத்தியவசிய மருந்துகளை கொள்வனவு செய்ய அவர் அன்பளிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.