போலி ஊடகப் பயிற்சி நிறுவனங்கள் தொடர்பில் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் விசேட அறிக்கை

போலி ஊடகப் பயிற்சி நிறுவனங்கள் தொடர்பில் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் விசேட அறிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் செயற்படும் போலி ஊடகப் பயிற்சி நிறுவனங்கள் தொடர்பில் அம்மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் விசேட அறிக்கையொன்றினை இன்று (17) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.