அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் தூதுக்குழு இலங்கை விஜயம்

அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் தூதுக்குழு இலங்கை விஜயம்

அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் (SFD) அபிவிருத்தி மதிப்பீட்டுப் பிரிவின் பிரதிநிதிகள் குழு இன்று (27) செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளது.

இந்தக் குழுவினை இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி கொழும்பிலுள்ள சவூதி தூதுவராலயத்தில் வரவேற்றார்.

இலங்கையின் சுகாதார அமைச்சினால் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட கால் - கை வலிப்பு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்கள் திட்டத்தின் செயற்படுத்தலுக்குப் பின்னரான மதிப்பீட்டை மேற்கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்திற்கு, அபிவிருத்திக்கான சவூதி நிதியம் 32 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கி உதவியது. இத்திட்டம் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தியோகபூர்வமாக இலங்கை மக்களிடம் கையளிக்கப்பட்டது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வளாகத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையானது 242 படுக்கைகள் கொண்ட 8 தளங்களைக் கொண்ட கட்டடத்தில் அமையப்பெற்றுள்ளது.

இது அதிகரித்து வரும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மூளையின் மின் ஆற்றலின் அதிகரிப்பால் ஏற்படும் வலிப்புக்கு சிகிச்சையளிப்பதற்கான சேவைகளை வழங்குகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.