200 பேருடன் இலங்கை வருகிறார் போரா சமூக தலைவர்

200 பேருடன் இலங்கை வருகிறார் போரா சமூக தலைவர்

போரா தாவூதி சமூகத்தின் அன்மீகத் தலைவரான கலாநிதி Dr. Syedna Mufaddal Saifuddin இலங்கைக்கான விஜயமொன்றினை இன்னும் சில நாட்களில் மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த சமூகத்தினைச் சேர்ந்த 200 பேர் இவருடன் விசேட விமானமொன்றில் இலங்கை வரவுள்ளனர். இதற்கான அனுமதியினை அரசாங்கம் வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொவிட் - 19 இன் பரவல் குறைவடையும் வரை இவர்கள், பண்டாரவளையில் தங்கியிருக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரா தாவூதி சமூகத்தினரின் விருப்பமான ஒரு நாடாக இலங்கை அண்மைக் காலமாக காணப்படுகின்றது.

கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற போரா தாவூதி சமூகத்தின் ஆஷரா முபாரக் ஒன்றுகூடலில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.