பாராளுமன்ற கலைப்பு தொடர்பான மனுக்களை 18, 19ஆம் திகதிகளில் பரிசீலனை

பாராளுமன்ற கலைப்பு தொடர்பான மனுக்களை 18, 19ஆம் திகதிகளில் பரிசீலனை

பாராளுமன்ற கலைப்பு மற்றும் ஜுன் 20 இல் தேர்தல் என தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஆகியவற்றினை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏழு மனுக்களை எதிர்வரும் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் பரிசீலிக்கவுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

இதேவேளை, தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்காக ஆணைக்குழு சார்பாகவே அதன் உறப்பினர்கள் நீதிமன்றில் ஆஜராக முடியாது என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.