பிரதமருடன் நாளைய கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியும் கலந்துகொள்ளாது

பிரதமருடன் நாளைய கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியும் கலந்துகொள்ளாது

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை (04) திங்கட்கிழமை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி கலந்துகொள்ளவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவதில்லை என ஏற்கனவே தீர்மானித்துள்ளன.

இந்த நிலையிலேயே ஐக்கிய தேசிய கட்சியும் கலந்துகொள்வதில்லை என தீர்மானித்துள்ளது. பிரதமரின் நாளைய கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு 2015 இடம்பெற்ற தேர்தலின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படாத பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையே இந்த தீர்மானத்திற்கு பிரதான காரணமாகும்.