நவம்பர் இறுதியில் ஜனாதிபதி தேர்தலுக்கான சாத்தியப்பாடுகள்

நவம்பர் இறுதியில் ஜனாதிபதி தேர்தலுக்கான சாத்தியப்பாடுகள்

எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்வரும் நவம்பர் 09ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 9ஆம் வரையான காலப் பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தலினை நடத்த வேண்டியுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு தற்போது முன்னெடுத்துள்ளது.

இந்த எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் கல்வி பொதுத் தராதர (சாதாரன தர) பரீட்சை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம், தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.

இதனால் நவம்பர் மாத இறுதியில் ஜனாதிபதி தேர்தலினை நடத்த வேண்டிய நிலை தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள தினம் தொடர்பான எந்தவித இறுதித் தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.