கட்சி நெருக்கடியை கருத்திற்கொள்ளாமல் மாலைத்தீவு செல்லும் ரணில் - உறுப்பினர்கள் அதிருப்தி

கட்சி நெருக்கடியை கருத்திற்கொள்ளாமல் மாலைத்தீவு செல்லும் ரணில் - உறுப்பினர்கள் அதிருப்தி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் மாலைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.

அங்கு நடைபெறவுள்ள இந்துசமுத்திர மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.

ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் புதிய கூட்டணி விவகாரங்களில் கட்சி தற்போது நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறது.

அதனை கருத்திற்கொள்ளாமல் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக, கட்சி உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இதனால் இன்றையதினம் நடைபெறவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றக் குழு கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.