மீண்டும் படையெடுக்கும் அகதிப் படகுகள்

மீண்டும் படையெடுக்கும் அகதிப் படகுகள்

இலங்கையில் இருந்து இந்த ஆண்டில் மட்டும் 6 அகதிகப் படகுகள் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்துள்ளன.

அவற்றில் 90 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்ததாகவும், அவர்களில் அநேகமானவர்கள் நாடுகடத்தப்பட்டிருப்பதாகவும் அவுஸ்திரேலிய அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் தீவை அண்மித்த கடற்பரப்பில் புதிய அகதி படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் பயணிக்கின்ற அகதிகளும் உடனடியாக இலங்கைக்கு நாடுகடத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இலங்கையில் தற்போது சிங்கள – தமிழர் இனப்பிரச்சினை இல்லாத நிலையில், அகதிகளின் படையெடுப்பு ஆத்திரமூட்டுவதாக அந்நாட்டின் அமைச்சர் பீற்றர் டட்டன் குறிப்பிட்டுள்ளார்.