ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாளராக மிஸ்பா நியமனம்

ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாளராக மிஸ்பா நியமனம்

எஸ்.என்.எம்.சுஹைல்

ஐக்­கிய தேசியக் கட்சியின் பொரு­ளா­ள­ராக சட்­டத்­த­ரணி மிஸ்பா சத்தார் கட்சித் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்­கவினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இந்த நியமனம் தொடர்­பான நியமனக் கடிதம் கட்சி தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­ன­ரான சட்­டத்­த­ரணி மிஸ்பா, பொதுத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சியின் தேசி­யப்­பட்­டி­யலில் உள்ளீர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்­கிய தேசியக் கட்சியின் பொரு­ளா­ள­ராக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, குறித்த பதவியினை அண்மையில் இராஜினாமாச் செய்தார். இதனை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.