சிறுமியை கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிப்பு

சிறுமியை கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிப்பு

திருகோணமலையில் சிறுமியொருவரை கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி திருகோணமலை தலைமைக பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. தனது இரு பாட்டிளோடு வருகை தந்த குறித்த சிறுமியை திருகோணமலை பொது பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் வைத்து கடத்தி சென்றுள்ளனர்.

பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி கெமரா காட்சிகளின் மூலம் கடத்தல் காரரை இனங்கண்ட பொலிஸார் உடன் செயற்பட்டு 40 நிமிடங்களில் அவரை கைது செய்தனர். சம்பவம் தொடர்பில் 23 வயதான குறித்த இளைஞனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.