"தமிழர்களையும் முஸ்லிம்களையும் கையேந்த வைப்போம்" என விமல் வீரவன்ச கூறினாரா?

"தமிழர்களையும் முஸ்லிம்களையும் கையேந்த வைப்போம்" என விமல் வீரவன்ச கூறினாரா?

“வாக்குகளுக்காக தமிழர்களிடமும் , முஸ்லிம்களிடமும் கையேந்தமாட்டோம். அவர்களை எம்மிடம் கையேந்த வைப்போம்” என அமைச்சர், விமல் வீரவன்ச, 12.06.2020இல் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்ததாக சமூகவலைத்தளங்கள் மற்றும் சில இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

BCC என்ற முகப்புத்தக புத்தகம், ceylonnews.media என்ற இணையத்தளம் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களில் இச்செய்தி பதிவிடப்பட்டுள்ளது.

"எனினும், 2020 ஜூன் மாதம் 12ஆம் திகதி அமைச்சர் விமல் வீரவன்ச ஊடக சந்திப்பொன்றை நடத்தவில்லை எனவும் அவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பரப்பப்படும் இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது" எனவும் தேசிய சுதந்திர முன்னணயின் ஊடக செயலாளர் அனுருத்த பண்டார ரனவரன தெரிவித்தார்.