பாராளுமன்ற பொதுமக்கள் கலரி மறு அறிவித்தல் வரை திறக்கப்படாது

பாராளுமன்ற பொதுமக்கள் கலரி மறு அறிவித்தல் வரை திறக்கப்படாது

கொவிட் - 19 நோய்த்தொற்று காரணமாக மீள அறிவிக்கப்படும் வரை பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கலரியை பொதுமக்களுக்காக திறக்கப்படுவதை
நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பிரிவின் அறிவுறுத்தலுக்கமையவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் படைக்கலச் சேவிதர் நரேந்திர ப்ரனாந்து தெரிவித்தார்.

பாராளுமன்ற பொதுமக்கள் கலரியை மீண்டும் திறப்பது தொடர்பான திகதி சுகாதாரத் துறையின் ஆலோசனையின் படி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்.