இரண்டு வருடங்களின் பின்னர் ஓய்வுபெறும் நோக்கமில்லை: மஹிந்த

இரண்டு வருடங்களின் பின்னர் ஓய்வுபெறும் நோக்கமில்லை: மஹிந்த

இரண்டு வருடங்களின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக மக்கள் என்னை தெரிவுசெய்துள்ளனர். இதனால் குறித்த காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஓய்வுபெறும் நோக்கம் எதுவுமில்லை என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்தியினை பிரதமர் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.