சமய ஸ்தலங்கள் 12இல், தனியார் வகுப்புக்கள் 29இல் திறப்பு

சமய ஸ்தலங்கள்  12இல், தனியார் வகுப்புக்கள் 29இல் திறப்பு

கொரோனா வைரஸ் பரவலினை அடுத்து மூடப்பட்டிருந்த பள்ளிவாசல்கள் உள்ளிட்ட அனைத்து சமய ஸ்தளங்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சமய ஸ்தளங்களில் ஒரே சமயத்தில் 50 பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று தனியார் வகுப்புகளை ஜூன் 29ஆம் திகதி முதல் திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த தனியார் வகுப்புகளில் ஒரு சமயத்தில் 100 மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.