கொவிட் - 19 இனால் கிழக்கில் மற்றுமொருவர் உயிரிழப்பு

கொவிட் - 19 இனால் கிழக்கில் மற்றுமொருவர் உயிரிழப்பு

கொவிட் - 19 இன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் மற்றுமொரு உயிரிழப்பு இன்று (21) திங்கட்கிழமை பதிவாகியுள்ளது என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

"சாய்ந்தமருது, வெலிவேரியன் பிரதேசத்தினைச் சேர்ந்த 63 வயது நபரே இன்று உயிரிழந்துள்ளார்" என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ. லாதாகரன் கூறினார்.

இதற்கமைய, கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த மூன்று பேர் இதுவரை கொவிட் - 19 நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த நபர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் மூலம் கொவிட் - 19 உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து குறித்த நபருடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.