பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைவர்களின் மாநாடு நேற்று (10) சனிக்கிழமை இரவு கொழும்பில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பினை இன்று (11) ஞாயிற்றுக்கிழமை மாலை சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருடாந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.