கொவிட்-19 நோயினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்: சிவில் சமூகம் கோரிக்கை

கொவிட்-19 நோயினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்: சிவில் சமூகம் கோரிக்கை

இலங்கையின் முதன்மையான மருத்துவ வாண்மையாளர்களின் அறிவுரையைக் கருத்திற் கொண்டு கொவிட்-19 தொற்று நோயினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என சிவில் சமூகத்தினர் இன்று (04) திங்கட்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் 68 சிவில் செயற்பட்டாளர்களும், 27 சிவில் அமைப்புக்களும் கூட்டாக இணைந்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையிலேயே அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இதன் கீழ்க் கையொப்பமிடும் தனி நபர்கள் மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் ஆகிய நாம் இலங்கையின் மருத்துவத் துறையில் முதன்மையான மற்றும் அதிகாரம் மிக்க தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் கொவிட்-19 தொற்று நோயினால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதித்திருப்பதை வரவேற்கின்றோம்.

எனவே, இவ்வறிவுரையைக் கருத்திற் கொண்டு, உடனடியாக வலிந்த தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருமாறு அரசாங்கத்தைக் கோருகின்றோம்.

கடந்த வாரத்தில், இலங்கையின் உயர் வைரஸ் கிருமி தொடர்பான நிபுணர்கள் மற்றும் முன்னணி மருத்துவ நிறுவனங்கள் காணப்படும் விஞ்ஞானச் சான்றுகளுக்கேற்ப கொவிட்-19 தொற்று நோயினால் இறந்தவர்களை அடக்கம் செய்வது அனுமதிக்கப்பட முடியும் என வெளிப்படையாக அறிவித்தனர். ஜனவரி 02ஆம் திகதி இலங்கை மருத்துவர்கள் சங்கம் (SLMA) கொவிட்-19 தொற்று நோயினால் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியும் என உறுதி செய்யும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில் "குறித்த வைரஸ் இறந்த உடல்களில் தொற்றடையும் நிலையில் காணப்படும் சாத்தியமில்லை" எனக் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் கொவிட்-19 தொற்றினால் இறந்தவர்களின் உடலைப் புதைப்பதால் பொதுமக்கள் சுகாதாரத்துக்கு தீங்கு ஏற்படும் என விஞ்ஞான ரீதியான சான்றுகள் உலகின் எப்பாகத்தில் இருந்தும் பெறப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த டிசம்பர் 31ஆம் திகதி இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி (CCPSL) இதே போன்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கொவிட்-19 தொற்று நோய் தொடர்பில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள 85,000 மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளில் எந்த ஒரு கட்டுரையிலும் இறந்த உடலில் இருந்து வைரஸ் பரவும் எந்த ஒரு சம்பவமும் பதிவு செய்யப்படவில்லை என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொவிட்-19 தொற்று நோயினால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதால் நிலக்கீழ் நீர் மாசடையும் என்ற வாதத்தை தகர்க்கும் வகையில் CCPSL இன் மேற்குறிப்படப்பட்ட நிலைப்பாட்டு அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

"SARS-CoV-2 வைரஸ் நிலக்கீழ் நீரினால் பரவும் என்ற வாதம் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை அத்துடன் இவ்வைரஸ் குடிநீரினால் கடத்தப்படுவதற்கான எவ்வித எடுத்துக் காட்டுகளும் இல்லை".

உலகின் புகழ்பெற்ற வைரஸ் ஆய்வு அறிஞரான இலங்கையின பேராசியர் மலிக் பீரிஸ் மற்றும் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினரான சிரேஷ்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் இலங்கை அரசாங்கத்தின் தகனம் மாத்திரம் என்ற கொள்கையை சவாலுக்கு உட்படுத்தும் வகையிலும் பாதுகாப்பான நல்லடக்கத்துக்கு ஆதரவாகவும் தமது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

SLMA மற்றும் CCPSL ஆகிய இரு அமைப்புகளும் இறந்தவர்களின் உடலினை அடக்கம் செய்வதால் தொற்று பரவலைடையும் அபாயத்தை விட கொவிட்-19 நோயாளிகளின் கழிவுகளால் நீர் வழங்கல் தொற்றடையும் அபாய நேரிடர் அதிகமானது என வாதிடுகின்றன.

மேற்குறிப்பிடப்பட்ட உறுதியான மற்றும் அதிகாரபூர்வமான மருத்துவ அறிவுரைக்கு ஏற்ப அரசாங்கம் கொவிட்-19 தொற்றினால் மரணமடைந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம் மற்றும் தகனம் செய்யப்படுவதை சாத்தியமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இதன் கீழ்க் கையொப்பமிடும் நாம் வலியுறுத்துகின்றோம்.

இக்கொள்கையே கடந்த வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை அமுலில் இருந்தது. எனினும், அதன் பின்னர் எதிர்பாராத வகையில் சுகாதார அமைச்சு கொவிட்-19 தொற்று நோயினால் இறந்தவர்களை தகனம் மாத்திரமே செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலை வழங்கியது.

அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஊடகக் கட்டுரைகள் மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் தொற்றுள்ளவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கும் இக்கொள்கை பிரயோகிக்கப்படுவதை சுட்டிக்காட்டின.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபை வதிவிடப் பிரதிநிதி, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்கள், OIC அமைப்பின் நிரந்தர மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற சர்வதேச அமைப்புகள், அமர புர மஹா சங்க அபாவ மற்றும் ராமன்ன மஹா நிகாய உள்ளடங்கலான இலங்கையின் மதத் தலைவர்கள், சிவில் சமூக நிறுவனங்கள் மற்றும் கரிசனை கொண்ட குடிமக்கள் போன்ற எண்ணற்ற தரப்பினர் மேற்கொண்ட வேண்டுகோள்களுக்கு மத்தியிலும் இக்கொள்கை அரசாங்கத்தினால் பிடிவாதமாக பின்பற்றப்பட்டு வருகின்றது.  

இலங்கையின் சொந்த மருத்துவ சமூகம் கொவிட்-19 தொற்றினால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆதரவளிக்கும் நிலையில் இலங்கையின் மதச் சிறுபான்மையினரை பாகுபாட்டுக்கு உட்படுத்தும் அரசாங்கத்தின் தகனம் மாத்திரம் என்ற கொள்கையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான எந்த வித வாய்ப்புகளும் இல்லை.

வலிந்த தகனத்தினால் ஏற்படும் மத மற்றும் கலாச்சார பின் விளைவுகள் சமூகங்களின் சக வாழ்வு மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றைப் பாதிப்பது மாத்திரமன்றி பொதுமக்களின், குறிப்பாக பாதிக்கப்பட்ட குழுக்களின் பொதுச் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு என்பவற்றில் கட்டுப்படுத்த முடியாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் என மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு மருத்துவ அமைப்புகளும் சுட்டிக்காட்டுகின்றன.

கொவிட்-19 தொற்று நோயினால் இறந்தவர்களின் உடல்களைக் கையாளுதல், மரணச் சடங்குகளில் பங்கேற்றல் மற்றும் சமூக ஒன்று கூடல் என்பவற்றுடன் இணைந்துள்ள கொவிட்-19 தொற்றுப் பரம்பல் அபாய நேரிடர் பற்றி நாம் நன்கு உணர்ந்துள்ளோம்.

எனவே இந்நடவடிக்கைகளின் சட்டபூர்வமான கட்டுப்பாடுகளுக்கு நாம் ஆதரவளிப்போம். கடந்த காலத்தைப் போன்று அவ்வாறான நடவடிக்கைகளுக்கு இலங்கையின் அனைத்துச் சமூகங்களும் ஆதரவளிக்கும் என்பதில் ஐயமில்லை.    

விஞ்ஞான ரீதியான சான்றுகள் எவையுமற்ற நிலையில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் வலிந்த தகனக் கொள்கை குறிப்பிட்ட மதக் குழுக்களுக்கு மிகவும் துன்பத்தையும் வேதனையையும் வழங்குகின்றது, எனவே அக்கொள்கை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

எனவே, மருத்துவத் துறையில் உள்ள கௌரவம் மிக்க இந்தத் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளால் வழங்கப்பட்டுள்ள தெளிவான அறிவுரைக்கு செவி சாய்த்து சிறுபான்மை மதக் குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்கள் தமது இறந்த உடலங்களை தடைகளின்றி அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.         

மேலொப்பமிட்டோர்:  

தனிநபர்கள்
1.      A.M. Ranawana
2.      Amalini de Sayrah
3.      Ambika Satkunanathan
4.      Anithra Varia
5.      Anne-Marie Fonseka
6.      Annouchka Wijesinghe
7.      Anthony Jesudasan - Human Rights Defender
8.      Anthony Vinoth
9.      Anushani Alagarajah
10.   Aritha Wickramasinghe
11.   Bishop Duleep de Chickera
12.   Bishop Kumara Illangasinghe
13.   Channaka Jayasinghe
14.   Deekshya Illangasinghe
15.   Dinusha Panditaratne
16.   Dr. Jehan Perera
17.   Dr. K. Guruparan - Attorney- at-law
18.   Dr. Mario Gomez
19.   Dr. Radhika Coomaraswamy
20.   Dr. Tara de Mel
21.   Geethika Dharmasinghe
22.   Godfrey Yogarajah
23.   Gowthaman Balachandran
24.   Ian Ferdinands
25.   Joanne Senn
26.   K.J. Brito Fernando
27.   Kshama Ranawana
28.   Kumudini Samuel
29.   Marisa de Silva
30.   Megara Tegal
31.   Nagulan Nesiah
32.   Nilshan Fonseka
33.   Niran Wirasinha - Reconciliation and Peace Desk
34.   Niyanthini Kadirgamar
35.   P. Muthulingam
36.   P.N. Singham
37.   Philip Dissanayake
38.   Prabodha Rathnayaka
39.   Prof. Jayadeva Uyangoda
40.   Professor Chandraguptha Thenuwara
41.   Ralston Weinman
42.   Rev. Andrew Devadason - Vicar, St . Paul's Church, Milagiriya
43.   Rev. Asiri P Perera (Former President Bishop Methodist Church Sri Lanka)
44.   Rev. Dr. Jayasiri Peiris
45.   Rev. Fr. F. C. J. Gnanaraj (Nehru)
46.   Rev. Fr. Jeyabalan Croos
47.   Rev. Fr. Nandana Manatunga
48.   Rev. Fr. Rohan Peries
49.   Rev. Fr. Sarath Iddamalgoda
50.   Rev. Marc Billimoria
51.   Rev. Sr. Deepa Fernando
52.   Rev. Sr. Nichola Emmanuel
53.   Rev. Sr. Noel Christine Fernando
54.   Rev. Sr. Rasika Pieris
55.   Ruwan Laknath Jayakody
56.   S. Thilipan
57.   Sakuntala Kadirgamar
58.   Sandun Thudugala
59.   Sanjana Hattotuwa
60.   Sarah Arumugam
61.   Selvaraja Rajasegar (Editor, www.maatram.org)
62.   Senel  Wanniarachchi
63.   Sheila Richards
64.   Stella J. J. Victor
65.   Sugath Rajapaksha
66.   Swasthika Arulingam - Attorney-at-law
67.   Ven. Fr. Samuel J Ponniah - Archdeacon of Jaffna, Church of Ceylon (Anglican)
68.   Visaka Dharmadasa

அமைப்புக்கள்
1.      Alliance for Minorities
2.      Association of War Affected Women
3.      Centre for Policy Alternative
4.      Dabindu Collective
5.      Eastern Social Development Foundation
6.      Families of the Disappeared
7.      Forum for Affected Families, Mannar
8.      Hashtag Generation
9.      Human Elevation Organisation
10.   Human Rights Office (HRO)
11.   Institute of Social Development
12.   International Centre for Ethnic Studies (ICES)
13.   iProbono
14.   Law and Society Trust
15.   Liberation Movement
16.   Mannar Women’s Development Federation
17.   National Peace Council
18.   Right to Life Human Rights Centre (R2L)
19.   Rights Now Collective for Democracy
20.   Rural Development Foundation
21.   Sangami Penkal Collective
22.   Shramabhimani Kendraya
23.   Sisterhood Initiative
24.   Women and Media Collective
25.   Women Education Research Centre (WERC)
26.   Women’s Action Network
27.    Suriya Women Development Centre