கொவிட்-19க்கு முகம் கொடுக்க அவுஸ்திரேலிய - இலங்கை பாதுகாப்புக் கூட்டிணைவு

கொவிட்-19க்கு முகம் கொடுக்க அவுஸ்திரேலிய - இலங்கை பாதுகாப்புக் கூட்டிணைவு

அவுஸ்திரேலியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட தனி நபர் பாதுகாப்பு உபகரணங்களின் ஒரு தொகுதி இன்று (29) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி மற்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கெப்டன் ஷோன அன்வின ஆகியோரினால் கொவிட்-19 ஐ தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது கருத்து வெளியிட்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஹொலி,

"உலக மட்டத்தில் சவாலை ஏற்படுத்தியுள்ள கொவிட் - 19 இன் சர்ச்சை எதிர்நோக்கப்பட்டு வரும் இத்தருணத்தில் அவுஸ்திரேலியா தனது ஒத்துழைப்பை இலங்கைக்குப் பெற்றுக்கொடுக்கிறது.

இதில் முக்கியமாக, கொவிட்-19 ஐ தடுக்கும் நடவடிக்கையில் முன்னின்று செயற்படுவோரைப் பாதுகாப்பதற்கான உபகரணங்களை இலங்கைக்குப் பெற்றுக் கொடுப்பதில் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புத் திணைக்களம் மிகவும் மகிழ்ச்சியடைகிறது" என்றார்.

இவ்வாறு வழங்கப்படும் பொருட்களில், இலங்கையில் செயற்படும் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றான அன்செல் மூலம் தயாரிக்கப்பட்ட 10,000 உயர்தர தனி நபர் பாதுகாப்பு உபகரணங்களும், 200,000 கையுறைகளும் அடங்குகின்றன.

இவை, இலங்கையில் கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றறது. இதன் மூலம், இலங்கையில் கொவிட்-19ஐ சமாளிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் மொத்தம் 1.47 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது.

இவற்றில், தேசிய ஆய்வுகூடங்களைப் பலப்படுத ;துவதற்காக சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்ட உதவிகளும், இலங்கையின் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட முக்கியமான அத்தியாவசிய உணவு மற்றும் பாதுகாப்பு சுகாதார பொருட்களும் உள்ளடங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.