ஊரடங்கு அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் மே மாதம் 31 வரை நீடிப்பு

 ஊரடங்கு அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் மே மாதம் 31 வரை நீடிப்பு

அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள ஊரடங்கு அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் மே மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று (29) புதன்கிழமை தெரிவித்தார்.

ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நாளை 30ஆம் திகதி வியாழக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையிலே குறித்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.