'யாழ். விமான நிலையத்தை விஸ்தரிக்க நடவடிக்கை’

'யாழ். விமான நிலையத்தை விஸ்தரிக்க நடவடிக்கை’

யாழ்ப்பாணம், பாலாலி விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்கு
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சுற்றுலா, விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இதற்கமைய, இந்திய அரசாங்கத்துடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்று எதிர்பார்க்கப்படுவதாகவும்
கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கொரோனா வைரஸ் ஏற்படுவதற்கு முன்னர், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்குத் திட்டமிடிப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும், நாட்டில், கொரோனா வைரஸால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, அது தாமதமானதென்றார்.

இப்போது நாடு மீண்டு வழமைக்குத் திரும்பியுள்ளதால், யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகள் விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அந்த விஸ்தரிப்புப் பணிக்கு இந்திய அரசாங்கம், 300 மில்லியன் ரூபாயை வழங்குவதற்கு இனங்கியுள்ளதெனவும் கூறினார்.

நீர் வழங்கல் கழிவு நீர் அமைப்பு கழிவுகளை அகற்றும் முறை, பயணிகள் புறப்படும் செக்-இன், செக்-அவுட் மற்றும் பயணிகளின் பிரிவு உள்ளிட்ட பல வசதிகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும்,
அமைச்சர் கூறினார