'எம்.பிக்களின் கொடுப்பனவுகளை அதிகாரிக்குமாறு யாரும் கோரவில்லை'

'எம்.பிக்களின் கொடுப்பனவுகளை அதிகாரிக்குமாறு  யாரும் கோரவில்லை'

"நான் உட்பட எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் தங்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரவில்லை" என எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (13) வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

"பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு பொருத்தமான நேரம் இதுவல்ல என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பரஸ்பரம் ஒத்துக்கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும்" அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல முன்மொழிவொன்றை சமர்ப்பித்ததாக அருண பத்திரிகையில் இன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதனை லக்ஷ்மன் கிரியெல்ல முற்றாக நிராகரித்ததுடன், இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றையும் இன்று மேற்கொண்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.