30 கடற் படை வீரர்களுக்கு கொவிட் தொற்று: இராணுவ தளபதி

வெலிசர கடற்படை முகாமில் 30 பேருக்கு கொவிட் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அந்த முகாமை தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதில் நேற்று வெலிகந்த பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கடற் படை வீரரும் உள்ளடங்குகின்றார்.

இதனையடுத்து குறித்த முகாம் தற்போது மூடப்பட்டுள்ளது. ஜாயல பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்திருந்தவர்களை இவர்கள் தேடிச் சென்ற நிலையிலேயே இவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.