55 நாள் குழந்தை கொவிட்-19 இனால் உயிரிழப்பு; ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய ஏற்பாடு

55 நாள் குழந்தை கொவிட்-19 இனால் உயிரிழப்பு; ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய ஏற்பாடு

பிறந்து 55 நாட்களேயேயான குழந்தையொன்று  கொவிட்-19 இனால் நேற்று (05) வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது.

கொழும்பு பிரதேசத்தினை குறித்த குழந்தை, லேடி றிச்வே சிறுவர் வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் பெற்றோர் தற்போது தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது உறவினர்கள் குழந்தையின் ஜனாஸாவினை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த குழந்தையின் ஜனாஸா, விரைவில் ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த தகவலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அலி சாஹிர் மௌலான விடியல் இணையத்தளத்திற்கு உறுதிப்படுத்தினார்.