MCC ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திடாது: ஜனாதிபதி

MCC ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திடாது: ஜனாதிபதி

MCC உடன்படிக்கையில் தமது அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைச்சாத்திடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கனவிலும் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

"இந்தியா எமது அண்டை நாடு போன்று சீனாவுடனான நட்பு 70 வருடங்களாக தொடர்கின்றது. எவ்வாறாயினும் புது டில்லிக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடிய எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படமாட்டாது" எனவும் அவர் கூறினார்..

இதேவேளை, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பேயுடனான சந்திப்பு மிகவும் சுமூகமாக நிறைவடைந்தாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.