SLPPஇன் அறிக்கைக்கு பதிலளிக்க தயாராகும் உதய கம்பன்பில

SLPPஇன் அறிக்கைக்கு பதிலளிக்க தயாராகும் உதய கம்பன்பில

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நேற்று (12) சனிக்கிழமை வெளியிடப்பட்ட  அறிக்கைக்கு அமைச்சர் உதய கம்பன்பில பதலளிக்கவுள்ளார்.

இதற்கமைய எரிசக்தி அமைச்சில் விசேட ஊடவியலாளர் மாநாடொன்று இன்று (13) ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 மணிக்கு அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளார்.

இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்தின் அறிக்கைக்கு பதலளிக்கவுள்ளதாக அமைச்சர் உதய கம்பன்பில தெரிவித்தார்.

வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்;சரவை உப குழுவின் அனுமதியுடன் எரிபொருட்களின் விலை கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு அதிகரிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் இந்த விலை ஏற்றத்திற்கு அமைச்சர் உதய கம்பன்பில பொறுப்புக்கூறி அமைச்சர் பதவியினை இராஜினாமாச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் அறிக்கையொன்றினை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.