முஸ்லிம் சேவையின் உதவிப் பணிப்பாளராக ரினோஸியா நியமனம்

முஸ்லிம் சேவையின் உதவிப் பணிப்பாளராக ரினோஸியா நியமனம்

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் உதவிப் பணிப்பாளராக எம்.ஜே. பாத்திமா ரினோஸியா நியமிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட அமைப்பாளராகவும், ஒலிபரப்பாளராகவும் இவர் செயற்பட்ட நிலையிலேயே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய இவர், முஸ்லிம் சேவையின் முதல் பெண் உதவி பணிப்பாளர் எனும் பெருமையைப் பெருகின்றார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் 95ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வுகள் நேர்முகப் பரீட்சையின் மூலம் வழங்கப்படுகின்றன.

இதன் அடிப்படையிலேயே முஸ்லிம் சேவையின் பணிப்பாளருக்கான நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முஸ்லிம் சேவையின் பொறுப்பாளர் பதவியிலிருந்து ஸனூஸ் முஹம்மத் பெரோஸ்,கடந்த டிசம்பர் 7ஆம் திகதி இராஜினாமாச் செய்துள்ளார்.