தென் கிழக்கு பல்கலையின் உப வேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்

தென் கிழக்கு பல்கலையின் உப வேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தாரினால் இது தொடர்பான அறிவித்தல் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக கடந்த ஐந்து வருடங்களாக செயற்பட்டு வரும் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீமின் பதவிக் காலம் விரைவில் நிறைவடையவுள்ளது.

இதன் காரணமாகவே உப வேந்தர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு முன்னர் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை இந்த லிங்கின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.