விடியல் இணையத்தளத்தின் ஏற்பாட்டில் RTI செயலமர்வு

விடியல் இணையத்தளத்தின் ஏற்பாட்டில் RTI செயலமர்வு

"தகவலறியும் சட்டத்தினை (RTI) வினைத்திறனாகப் பயன்படுத்துவோம்" எனும் தொனிபொருளில் விடியல் இணையத்தளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு செயலமர்வுகள் அண்மையில் இடம்பெற்றன.

யாழ்ப்பாணம் மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இந்த செயலமர்வுகளில் பல்கலைக்கழக மாணவர்கள்,இளைஞர்கள், சிவில் செயற்பட்டார்கள் என 40 பேர் கலந்துகொண்டனர்.

இந்த செயலமர்வின் வளவாளராக விடியல் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் றிப்தி அலி கலந்துகொண்டு தகவலறியும் சட்டம் தொடர்பிலும், அதனை வினைத்திறனாப் பயன்படுத்துவது தொடர்பிலும் விரிவுரைகளை நிகழ்த்தினார்.

இந்த செயலமர்வுகளின் இறுதியில் பல தகவலறியும் கோரிக்கைகள் பங்குபற்றுனர்களினால் தயாரிக்கப்பட்டன.

இந்த செயலமர்வுகளிற்கான நிதி அனுசரனையினை யாழ்ப்பாணத்திலுள்ள அமெரிக்க தகவல் கூடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.