கல்முனை மாநகர சபை உறுப்பினராக சத்தார் நியமனம்

கல்முனை மாநகர சபை உறுப்பினராக சத்தார் நியமனம்

கல்முனை மாநகர சபையின் தோடம்பழ சுயேட்சை குழுவின் உறுப்பினராக வர்த்தகர் யூ. சத்தாரை (ஜலால்) நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுயேட்சை குழுவின் மாநகர சபை உறுப்பினரான முஹர்ரம் பஸ்மீர், கடந்த டிசம்பர் 25ஆம் திகதி தனது பதவியினை இராஜினாமச் செய்தார்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே முஹர்ரம் பஸ்மீரின் வட்டரத்தினைச் சேர்ந்த சத்தாரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் கல்முனை மாநகர சபையின் தோடம்பழ சுயேட்சை குழு உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து இந்த நியமன் தொடர்பான தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், புதிய உறுப்பினரின் பெயரை வர்த்தமானி அறிவித்தலுக்காக அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கல்முனை மாநகர சபை தேர்தலில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் ஆதரவுடன் களமிங்கிய தோடம்பழ சுயேட்சை குழு ஆறு வட்டாரங்களை வெற்றிகொண்டு போனஸ் ஆசனங்களுடன் ஒன்பது ஆசனங்களை கைப்பற்றியமை குறிப்பிடதத்க்கது.