அமான் அஷ்ரப் தலைமையில் தேசிய முஸ்லிம் பேரவை உதயம்

அமான் அஷ்ரப் தலைமையில் தேசிய முஸ்லிம் பேரவை உதயம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும், காலஞ்சென்ற அமைச்சருமான எம்.எச்.எம். அஷ்ரபின் புதல்வாரன அமான் அஷ்ரப் தலைமையில் இலங்கை தேசிய முஸ்லிம் பேரவை எனும் சிவில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி வர்த்தகர்கள், சட்டத்தரணிகள், வைத்திய கலாநிதிகள் மற்றும் சிவில் செயற்பட்டாளர்கள் உள்ளிடக்நிகிய ஒரு குழுவினராலேயே இந்த பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை முஸ்லிம் சமூகத்தினை சேர்ந்த சோனர், மேமன், மலே மற்றும் தாவூதி போரா ஆகிய குழுக்களின் பிரதிநிதிகளே இந்த அமைப்பின் ஸ்தாபகர்களாவர்.

இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இனங்களிடையே நல்லிணக்கத்தினை உருவாக்கி சிறந்த உறவினை கட்டியெழுப்பும் நோக்கிலேயே இந்த பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தேசிய முஸ்லிம் பேரவையின் கட்டமைப்பு தொடர்பான அறிக்கையொன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவிற்கு கடந்த ஜனவரி 20ஆம் திகதி கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.