சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை காட்சிப்படுத்தவும்

சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை காட்சிப்படுத்தவும்

றாசிக் நபாயிஸ்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள 73ஆவது சுதந்திர தினத்ததை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும்இ வர்த்தக நிலையங்களிலும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும் வாகனங்களில் எதிர்வரும் பெப்ரவரி 01ஆம் திகதி தொடக்கம் 07 ஆம் திகதி வரையான ஒரு வார காலப் பகுதியில் தேசிய கொடியை காட்சிப்படுத்துமாறு அரச பாதுகாப்புஇ உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

அரச நிறுவனங்கள் அமைந்துள்ள அனைத்துக் கட்டிடங்களிலும் 2021 பெப்ரவரி மாதம் 03ஆம், 04ஆம் தினங்களில் மின் விளக்குகளால் அலங்கரிக்குமாறும் இராஜாங்க அமைச்சு அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளது.

73ஆவது சுதந்திர தின விழா இம்முறை 'வளமான எதிர்காலமும் - சுபீட்சமான தாய் நாடும்' எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் அரச பாதுகாப்புஇ உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் நெறிப்படுத்தலில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. .