பெப்ரவரி இறுதியில் இலங்கை வருகிறார் இம்ரான் கான்

பெப்ரவரி இறுதியில் இலங்கை வருகிறார் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பெப்ரவரி 23ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளரான அட்மிரல் ஜயந்த கொலம்பகே தெரிவித்தார்.

இம்ரான் கானின் இலங்கை விஜயம் நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திகதி இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையிலேயே தற்போது திகதி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மாத்திரமே கொழும்பில் தங்கியிருக்கவுள்ள இவர், குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து பேச்சுவார்தை நடத்தவுள்ளார்.

கொவிட் - 19 நோய் பரவலுக்கு மத்தியில் முதற் தடவையாக  அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.