ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி; இன்று நள்ளிரவு வர்த்தமானி வெளியாகும்?

ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி; இன்று நள்ளிரவு வர்த்தமானி வெளியாகும்?

கொரோனா வைரஸினால் உயிரிழக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்யவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

இது தொடர்பான வர்;த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு சுகாதார அமைச்சரினால் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (25) வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற அரசாங்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

இதற்கு சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவும் அனுமதி வழங்கியுள்ளது என அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன மேலும் தெரிவித்தார்.