மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு முழு ஆதரவை வழங்குவோம்: சீனா

மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு முழு ஆதரவை வழங்குவோம்: சீனா

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு தேவையான முழு ஆதரவையும் வழங்குவோம் என சீனா அறிவித்துள்ளது.

இந்த பேரவையின் 46ஆவது அமர்வு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதன்போது இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே சீனா குறித்த அறிவிப்பனை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதியான தூதுவர் CHEN Xu நேற்று (25) வியாழக்கிழமை பேரவையில் சிறப்புரையொன்றினை நிழத்தும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.