பிரதமரால் அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவு

 பிரதமரால் அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவு

நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்க சபை மற்றும் நீதித்துறையின் சாத்தியமான கருத்துக்களை உள்ளடக்கிய அரசியலமைப்புத் திருத்தத்தை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ எதிர்பார்ப்பதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த திருத்தப்பட்ட அரசியலமைப்பினூடாக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்பது பிரதமரின் எதிர்பார்ப்பு எனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.